முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டம் அழிச்சிகுடி ஊராட்சி, நாலாந்தெத்து தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இதில் தொழில்நுட்ப பிரிவு கவுதமன், மணிவேல், சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.