பால் விலை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
பால் விலை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கே.ஆனைப்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கறவை மாடுகளுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பசும்பால் லிட்டர் ரூ.32, எருமைப்பால் லிட்டர் ரூ.42, என்பது கட்டுபடியாகாததால்,  ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும், கலப்புத்தீவனங்களை 50% மானியத்தில் வழங்க வேண்டும், முறைகேடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி