சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் நடத்திய சோதனையில், மசாஜ் சென்டரின் உரிமையாளர் திருவொற்றியூர் பிரேமா (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.