“நரேந்திர மோடி சட்டத்தால் ஆளப்படவில்லையா? அல்லது சட்டங்களும் விதிகளும் அவருக்கு பொருந்தாதா? இதற்கு பிரதமர் அலுவலகம் பதில் சொல்லுமா?" என விவேகாந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான அறையை புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தியானம் செய்த மோடியின் புகைப்படங்கள் வெளியானது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடைசி கட்ட தேர்தலுக்கு முன்பு கடந்த மே 30ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டார்.