சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி வரும் 21ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வார் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் சுமார் 9000 பேர் யோகாசனம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் 20 மாவட்டங்களில் இருந்து சுமார் 50,000 க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.