டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்று இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் பதற்றம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.