குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 19ஆம் தேதி சுவாமி தரிசனத்திற்கு வருகை தர இருந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்த பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வைகாசி மாதாந்திர சிறப்பு பூஜைக்காக மே 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என்றும், 19ஆம் தேதி வரை பூஜை நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.