மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுவில், மறைந்த முன்னாள் அரசியல்கட்சி தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நடிகர் & தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விஷயத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுகவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.