கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி உள்ளிட்டவைகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது. “மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை, இருந்தாலும் பாதுகாப்பிற்காக அணிவது நல்லது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.