சென்னை வேளச்சேரியை சேர்ந்த மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும் காமாட்சி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கர்ப்பமாக இருந்த காமாட்சிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே நகை அணிவது தொடர்பாக நேற்று (டிச. 17) தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காமாட்சி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.