நார்வே செஸ் போட்டியின் 8வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து உலகின் நம்பர்-1 மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்றில் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார். முதலில் அவர் 8வது சுற்றில் கார்ல்சனுடன் கிளாசிக்கல் ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் அர்மகெடான் டை பிரேக்கரை நடத்தினார். தொடர்ந்து அங்கு கார்ல்சன் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.