முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முன்னோடியான திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்றும் வரும் ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.