பொங்கல் தொகுப்பு டோக்கன் 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விநியோகிக்க பொங்கல் தொகுப்பு டோக்கன் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நியாயவிலை கடைக்காரர்கள் மூலம் 3-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, பொங்கல் தொகுப்பை 9-ம் தேதியில் இருந்து நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.