பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடந்த 2019ம் ஆண்டு உலுக்கி இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகியோரின் மீதான விசாரணை நிறைவுபெற்று இன்று (மே 13) தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றவாளிகளை கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று சேலம் மத்திய சிறையில் இருந்து அவர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.