9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸ்

64பார்த்தது
டெல்லி தயால்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை, போலீசார் சுட்டுப் பிடித்தனர். வெல்கம் ஜீல் பார்க் பகுதியில் பதுங்கியிருந்த நவ்ஷாத் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, இயற்கை உபாதை கழிக்கப்போவதாக கூறி வாகனத்தைவிட்டு இறங்கிய நவ்ஷாத், காவலரை பிளேடால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக தெரிகிறது. இதனால், துப்பாக்கியால் சுட்டு நவ்ஷாத்தை போலீசார் பிடித்தனர். காயமடைந்த நவ்ஷாத் சிகிச்சையில் உள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி