விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராமதாஸும், அன்புமணியும் ஒன்றாக இணைந்து பேசுவதே பிரச்சனைக்கு தீர்வு. தேர்தலுக்கு இன்னும் ஒராண்டே இருப்பதால் கட்சியில் கொறடா குறித்து பிரச்சனை ஏற்படாது. ராமதாஸும், அன்புமணியும் ஒன்றாக இணையாவிட்டால் பாமகவில் நலிவு தான் ஏற்படும். பாமகவில் அனைவரும் குழப்பத்திலும், வேதனையிலும் உள்ளனர். பாமக-வில் நிலவும் பிரச்சனைகளுக்கு எந்த கட்சியையும் குறை சொல்ல முடியாது, எந்த கட்சியும் காரணமில்லை” என்றார்.