பாமக நிறுவனரும், அதன் தலைவரும் வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என தெரிவித்துள்ள அவர், விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளார்.