16 தொகுதிகளை கையில் வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு எந்த கூட்டணிக்கு ஆதரவளிக்கிறாரோ அவர்களே ஆட்சியில் அமர முடியும் என்கிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் பிரதமரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க டெல்லிக்கு சென்றார். அப்பொழுது அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவமானத்துடன் ஆந்திரா திரும்பினார். தோல்விகள், அவமானங்கள், பின்னடைவுகள், புறக்கணிப்புகளை சந்தித்த அவர், தற்போது யாரால் அவமதிக்கப்பட்டாரோ, அவரை பிரதமர் ஆக்கும் இடத்தில் இருக்கிறார்.