கற்றாழை செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடக்கூடாது. கிழக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் நுழைவதால், உங்கள் வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட்டால், எதிர்மறை ஆற்றல் பரவ ஆரம்பித்து, வீட்டில் சச்சரவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உங்கள் படுக்கையறையில் கற்றாழை செடியை நட்டால், காலையில் இந்த செடியைப் பார்ப்பது உங்கள் வழக்கத்தைக் கெடுத்துவிடும். படுக்கையறையில் ஒரு முள் செடி இருப்பது குடும்ப வாழ்க்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், குடும்பத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனால், வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படுகிறது.