ராப்பூசலில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

97பார்த்தது
ராப்பூசலில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், ராப்பூசலை சேர்ந்தவர் கதிர்வேல் (52). இவர் ராப்பூசலில் உள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மதுவிலக்குக் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி