மே-1 ம் தேதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மே 10 தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மேற்கு வானொலி திடலில் தமிழ்ப்புலிகள் கட்சியின் உழைக்கும் தொழிலாளர் உரிமை மீட்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது, கட்சியின் மாவட்ட செயலாளர் வள்ளுவன் தலைமையில் நடந்த பொது கூட்டத்தில், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், கூட்டத்தில் மே - 1 உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடக்கும் இந்த பொது கூட்டத்தில் தொழிலாளர் உரிமை மீட்பு என்பது மத்திய அரசின் தொழிலாளரின் விரோத போக்கை கண்டித்தே நடப்பதாகவும், திராவிட மாடல் ஆட்சி ஏன் வேண்டும் என்பது குறித்தும், அம்பேத்கர் சட்டம் இயற்றியது குறித்தும் இதனை மாற்றி அமைக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும், கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிட கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.