பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் நடைபெற உள்ள விசிக நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள, பெரம்பலூர் வந்திருந்த அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் எம்பி-யுமான திருமாவளவன், நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பதாக தான் தங்கி இருந்த தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வேளாண்மை பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதி அறிவித்தது போல கரும்புக்கு டன் ஒன்று 4000 -வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் அறிவிப்பு வெளியிடவில்லையே என்ற கேட்டபோது, வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்பு குறிய திட்டமாகும். வேளாண்மையில் இந்த அரசு எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக்கூடிய ஒன்று தான், இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அது தொடர்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மைதான். மானிய கோரிக்கையின் போது இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். தமிழக முதல்வரும் துறை சார்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுகோள் விடுகிறேன் என்றார்.