பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டம்

69பார்த்தது
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் வாக்குறுதி படி சிறப்பு பென்ஷன் தொகை ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2. 57 காரணியால் பென்ஷன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைத்திட வேண்டும் என்ற இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி தங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன்
ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் நெற்றியில், பட்டை நாமமிட்டு, கையில் மடியின்றி பிச்சை கேட்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இ கோரிக்கை வலியுறுத்தி கோசமிட்டு தமிழக அரசுக்கு வலியுறுத்தியவர்கள், புதிய பேருந்து நிலையம் பகுதியில் கோரிக்கையை முளைக்கப்பட்டவாறு, கையில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் தங்கள் கோரிக்கைக்கு தமிழ அரசு செவிசாய்க்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிரமடையும் என தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி