மருதை யாற்றின் தடுப்பணையை முதல்வர் திறந்து வைத்தார்

54பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நீர்வளத்துறை சார்பில் பெரம்பலூர் ஒன்றியம் விளாமுத்தூர் கிராமத்தில் ரூ. 3. 90 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (04. 10. 2024) பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தடுப்பணையினை பார்வையிட்டார்கள்.

மருதையாறு, கொள்ளிடம் ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். மேலும் இது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான்பட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள பச்சைமலை மலையிலிருந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வழியாக தென்கிழக்கு திசையில் பாய்ந்து, கொள்ளிடத்தில் இணைகிறது.

விளாமுத்தூர் கிராமத்திற்கு அருகே மருதையாற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதால் தடுப்பணை சுற்றியுள்ள பகுதியில் 125 கிணறுகள் நீர் மட்டம் உயர்ந்து மறைமுக ஆயக்கட்டு 665. 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் குடிநீர் ஆதாரமும் அதிகரிக்கும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகள் துறை சார்ந்த அரசர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி