பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் தொன்மையும் பழமையும் வாய்ந்த புராதான வரலாறு கொண்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவில் உள்ளது, இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரமாத திருவிழாநடைபெறும் அதேபோன்று இந்த ஆண்டு சித்திரை மாத திருவிழா கடந்த மே 6 ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது, இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு மீது உலா நடைபெற்று வருகிறது இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது, இதில் ஊர் எல்லையில் சக்தி அழைத்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனே செலுத்தினார்கள். முக்கிய வீதி வழியாக சென்ற பால்குட ஊர்வலம் இறுதியாக மதுர காளியம்மன் கோவில் வந்தடைந்தது அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.