பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகளிர் திட்டம், பள்ளிக்கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநர் பாபு, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) பாண்டியன், பெரம்பலூர் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குணசேகரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் செல்வம், உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.