பெரம்பலூரில் சிறப்பு தொழுகையுடன் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. முஸ்லிம் மக்கள் ஆண்டுதோறும் ரமலான் பண்டிகை முன்னிட்டு, நோன்பிருந்து சிறப்பு தொழுகையுடன் பண்டிகையை கடைப்பிடிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உணவு தண்ணீர் இன்றி நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு 30 நாள் கழித்து இந்த ஆண்டுக்கான ரமலான் பண்டிகை இன்று (மார்ச் 31) நடைபெறுகிறது. அதற்கான சிறப்பு தொழுகை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதரசா பள்ளிவாசல் வளாகத்தில் சாலையில் நடைபெற்றது, ஹாஜி சல்மான் ஹஜ்ரத் தலைமையில் தொழுகை நடைபெற்றது.
இந்த சிறப்பு கூட்டு தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனை தொடர்ந்து புத்தாடை உடுத்திப் பிடித்த உணவை சமைத்து அனைவருக்கும் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், 4 ரோடு, துறைமங்கலம், லப்பைக்குடி, காடுவிகளத்தூர் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று, ரமலான் பண்டிகை கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரமலான் தொழுகையை கடைபிடித்து ரமலான் பண்டிகையை கொண்டாடினார்கள்.