பெரம்பலூர் மாவட்ட , ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் 14. 3. 2025 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான பென்ஷன் வழங்கிடும் என்ற தேர்தல் வாக்குறுதி எண் 313 படி 2025-26 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூபாய் 6, 750 அகவிலைப்படி வழங்கிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஓய்வூதிய சங்கங்களின் நிர்வாகிகள், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.