பெரம்பலூர்: சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு

50பார்த்தது
பெரம்பலூர்: சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பால்வளத் துறை சார்பில், சிறந்த பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவுச் சங்க செயலர்கள் மற்றும் பால் குளிர்பதன மையச் செயலர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு, அதிகமாக பால் வழங்கும் சிறந்த பால் உற்பத்தியாளர்கள், தரமான பால் வழங்கும் சங்கச் செயலர்கள் மற்றும் குளிர்பதன மையச் செயலர்களை தேர்ந்தெடுக்க, திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 

இக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட ஈச்சங்காடு பால் உற்பத்தியாளர் பாலகிருஷ்ணன், வயலப்பாடி பால் உற்பத்தியாளர் ராஜேஸ்வரி, திருவளக்குறிச்சி பால் உற்பத்தியாளர் வரதராஜ், பேரளி கூட்டுறவு சங்கச் செயலர் சின்னசாமி, பாடாலூர் கூட்டுறவுச் சங்க செயலர் வரதராஜ், அ.மேட்டூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க செயலர் ஜெயக்குமார் ஆகியோருக்கும், நாட்டார்மங்கலம் தொகுப்பு பால் குளிரூட்டும் மையச் செயலர் ஜெயராமன், அம்மாபாளையம் பால் குளிரூட்டும் மையச் செயலர் ஜெயசங்கர், பசும்பலூர் தொகுப்பு பால் குளிரூட்டும் மையச் செயலர் ஜெயபால் ஆகியோருக்கு முறையே தலா ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கி பாராட்டினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி