பெரம்பலூர்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

59பார்த்தது
பெரம்பலூர்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி அனைத்து அரசு அலுவலர்களும் (30. 10. 2024) ஏற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31-ம் தேதி இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை நாளாக (National Unity Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 31. 10. 2024 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறையாக இருப்பதால் அரசு வேலை நாளான (30. 10. 2024) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ‘இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்று உளமார உறுதியளிக்கிறேன்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்”; என்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி