பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று செட்டிகுளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 02 நகர புதிய பேருந்து சேவைகளையும் அரியலூரில் இருந்து நாகல்குழி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.