பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், 27. 04. 2025 அன்றைக்குள் அகற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.