பக்ரீத் சிறப்பு ஆட்டுசந்தை கோடிக்கணக்கில் விற்பனையான ஆடுகள்

67பார்த்தது
பெரம்பலூர் அருகே, சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.

பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆட்டு சந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலையில் நடைபெறும். பிரதி வாரம் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெறும் இந்த ஆட்டு சந்தையில், பெரம்பலூர் மட்டுமின்றி அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் இருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இரவு முதல் பல்லாயிரக்கணகில், போயர், தலைச்சேரி, மேச்சேரி, சென்னை சிவப்பு, ராமநாதபுரம் வெள்ளை, வேம்பூர், திருச்சி கருப்பு உள்ளிட்ட பல்வேறு வித வகையில் வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் என விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூபாய் 2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றதாக ஆட்டு சந்தை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடுகளை வாங்கிய வியாபாரிகளும், அதனை விற்பனை செய்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி