பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.