பெரம்பலூர் மாவட்ட காவலர்களுடன் “காபி வித் கான்ஸ்டபிள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருடன் காவலர்களின் நலன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் ஏழாம் தேதி இன்று மாவட்ட காவல் அலுவலத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி காபி வித் கான்ஸ்டபில்ஸ் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு, சிறப்பு பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை உள்ளவர்களில் ' 16 நபர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட காவல்துறையை மேம்படுத்தும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.
இந்த கலந்துரையாடல் மூலம் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குறை நிறைகள் மற்றும் மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தும் சில ஆலோசனைகளை பெற்று அதனை நடைமுறைபடுத்துவதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் மனநிலையை அறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.