காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி

50பார்த்தது
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது , இதில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் அமைப்புச் செயலாளர் ராம் மோகன், பொதுச் செயலாளர் செல்வம், மாநில துணை தலைவர் ராஜேந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில், காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்த ஓட்டு விகிதத்தை, தற்போது காங்கிரஸ் கட்சியில் கொண்டு வர வேண்டும் அதற்காக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கண்டிப்பாக உழைத்து வாக்கு வங்கியை அதிகரிக்க பாடுபட வேண்டும், என தெரிவித்தார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கும்போது,
தமிழகத்துக்கு நீட் தேர்வு கூடாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முதல் தீர்மானம் நிறைவேற்றி, சங்கல்ப இயக்கமும், பா. ஜ. க. வும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீட் தேர்வை இங்கு கொண்டு வந்தன. இதற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நாங்களும் எதிர்க்கிறோம்.
என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி