பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்ட ஆயுதப்படையில் இன்று காவல்துறையினரால் கழிவுசெய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 02 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19 வாகனங்கள் 13. 07. 2024-ம் ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் ஆயுதப்படை துணைக்காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. கிள்ளிவளவன் ஆகியோர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
மேலும் இந்த பொது ஏலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.