அரிமா சங்கம் சார்பில் 6 ஜோடிக்கு திருமணம்

65பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தில், அரிமா சங்கம் (லயன்ஸ் கிளப்) சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு ஜோடிகளுக்கு, தலா நாலு கிராம் தாலி உள்பட,
3 லட்சம் மதிப்பிலான,
சீர்வரிசை பொருட்களுடன், திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று துறையூர் சாலையில் உள்ள முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது பெரம்பலூர் அரிமா சங்கத்தின் தலைவர் முரளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் தாளாளருமான சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டார், இதில் ஆறு ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு அனைவருக்கும் கட்டில், மெத்தை, பீரோ, சமையல் பாத்திரங்கள்மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன, இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண விருந்து உபசரிப்பும் நடைபெற்றது, இதற்கான ஏற்பாடுகளை, அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் சுகுமார், சரவணன், செயலாளர் தமிழரசன் உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள் பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆறு திருமண ஜோடிகளின் உறவினர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் திரளானோர் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி