பெரம்பலூர்: மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

75பார்த்தது
பெரம்பலூர்: மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று 11.06.2025-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 33 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி