பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஆய்க்குடி, துங்கபுரம், கீழப்பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லக்ஷ்மி, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், முன்னிலையில் (10. 05. 2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் நீர்வளத் துறையின் சார்பில் சிறப்பு தூர்வாருதல் பணிகளின் கீழ் ஆய்க்குடி ஏரியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 1 கி. மீ தொலைவிற்கு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி, துங்கபுரம் ஊராட்சியில் உள்ள ஆணைவாரி ஓடையில் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் 1 கி. மீ தொலைவிற்கு தூர் வாருதல் பணி மற்றும் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் 1, 000 மீட்டர் நீளம் நரி ஓடையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் அகற்றி, பக்க கரைகளை வலுப்படுத்தி, தூர்வாரும் பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன்பே முடிக்க வேண்டும் எனவும், திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.