பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் வயது 37 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார், சுகுமார் பேரளி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் க. எரையூர் பிரிவு பாதை அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் சம்பவ இடத்திலேயே சுகுமார் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நல்ல சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்