நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்களை விசாரிக்க மனு முகாம்

483பார்த்தது
நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்களை விசாரிக்க மனு முகாம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் வசிக்கும் பொது மக்களின் நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து நேற்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

மேலும் மனு விசாரணை முகாமில் குன்னம் வருவாய் வட்டாட்சியர் அணிதா, பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அபுபக்கர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நல்லம்மாள், திரு. ராமர் மற்றும் தலைமை காவலர் 1510 திரு. பாலமுருகன்* ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டு 14 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி