பெரம்பலூர்: நீதிமன்ற வளாகத்தில் நடப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்

72பார்த்தது
பெரம்பலூர்: நீதிமன்ற வளாகத்தில் நடப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. 

இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியும்மாகிய A.பல்கீஸ் தலைமையில் பெரம்பலூர் நீதிமன்றத்தை சார்ந்த மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி இந்திராணி, தலைமை குற்றவியியல் நீதித்துறை நடுவர் சங்கர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்/சார்பு நீதிபதியும்மாகிய A.சரண்யா, குற்றவியியல் நீதிதுறை நடுவர் எண் 1 திருபிரேம் குமார் குற்றவியியல் நீதிதுறை நடுவர் எண் 2 செல்வி.கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி.தன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ், கூடுதல் மகிளா நீதிமன்ற குற்றவியியல் நீதிதுறை நடுவர் ரேஷ்மா உட்பட அனைத்து நீதிபதிகளும் மரக்கன்றுகள் நட்டனர். 

உடன் பெரம்பலூர் மாவட்ட பார் அசோசியசன் சங்க செயலாள் சேகர், அட்வகேட் அசோசியசன் சங்கத்தலைவர் சிவசங்கர் மற்றும் வேப்பந்தட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் தமிழரசன் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். மேலும் நீதிமன்ற ஊழியர்கள், சட்ட தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்/சார்பு நீதிபதியும்மாகிய A.சரணியா செய்திருந்தார்

தொடர்புடைய செய்தி