பெரம்பலூர்: மாயமான விவசாயி உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்பு

68பார்த்தது
பெரம்பலூர்: மாயமான விவசாயி உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்பு
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ஒகளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 75). விவசாயியான இவருக்கு கிழுமத்தூர்- அத்தியூர் செல்லும் சாலையோரத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவர் மக்காச்சோளம் விதைத்து பின்னர் அறுவடை செய்து முடித்துவிட்டார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மக்காச்சோளம் சக்கையை தீயிட்டு கொளுத்துவதற்கு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து மக்காச்சோளக் காட்டில் அவரது குடும்பத்தினர் தேடியபோது அவர் அங்கு இல்லை. இந்நிலையில் நேற்று காலை மக்காச்சோள சக்கைகள் எரிந்து முழுவதும் முடிந்த பிறகு பரமசிவத்தின் மகன் பாலகிருஷ்ணன் வயலுக்கு சென்று பார்த்தார். அப்போது பரமசிவம் உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் அவர் இதுகுறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரமசிவம் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி