பெரம்பலூர் மாவட்டம் காடூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லறிக்கையில் ரூ. 6, 58, 000 மதிப்பீட்டில் நாச்சியார் ஏரி தூர்வாரும் பணியும், ரூ. 14, 65, 000 மதிப்பீட்டில் புது ஏரி தூர்வாரும் பணியை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சால் தலைமையில் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.