பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் குன்னம் ஊராட்சியில் ரூ. 16, 45, 000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சாசி சிவசங்கர் இன்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் துவக்கி வைத்தார் நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.