மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

67பார்த்தது
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த, சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு அடைவதற்காக, வங்கிக்கடன்கள் வழங்கினார்கள். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து நேரலையில் பார்வையிட்டனர். பின்னர், 467 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4, 706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 37. 61 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அட்மா தலைவர் வீ. ஜெகதீசன், மகளிர் திட்ட அலுவலர் (பொ) கி. ரேச்சல் கலைச்செல்வி, உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், கிருஷ்ணன், சங்கர், முருகதாஸ், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), ஜாகிர் உசேன் (லப்பைக்குடிகாடு), மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி