பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுவரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையினை 31.03.2025-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். மேலும் பிறமாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் வேலை நிமித்தமாகவும், கல்லூரி படிப்பிற்காகவும் தங்கியுள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக்கடையில் ஆதார் நகலுடன் சென்று e-KYC பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நியாயவிலை கடை விற்பனை முனைய இயந்திரத்தில் e-KYC பதிவு செய்யும்போது விரல் ரேகை பதிவு ஆகாத நபர்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது கைரேகையினை புதுப்பித்த பின்பு e-KYC பதிவு செய்துகொள்ளலாம். பள்ளி/கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்கள்/மாணவியர்கள் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தங்களது கைரேகையினை பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்கள் கட்டாயம் தங்களது கைரேகை பதிவினை 31.03.2025-க்குள் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.