பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 8.5.2025 வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 96.58 சதவீத மாணவர்கள், மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 3,713 மாணவர்களும், 3,744 மாணவிகளும் என மொத்தம் 7,457 மாணவர்கள், மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,547 மாணவர்களும், 3,655 மாணவிகளும் என மொத்தம் 7,202 மாணவர்கள், மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.53 சதவீதமும், மாணவிகள் 97.62 சதவீதமும் என மொத்தம் பெரம்பலூர் மாவட்டம் 96.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார், சுயநிதிப்பள்ளிகள் என மொத்தம் 79 மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் மொத்தம் 36 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கை.களத்தூர், ரஞ்சன்குடி, மேலப்புலியூர், ஒகளுர், அனுக்கூர், சிறுவாச்சூர், பெரம்பலூர் (மாதிரி பள்ளி) என மொத்தம் 7 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியும், எறையூர் நேரு அரசு உதவிபெறும் பள்ளிகள், 27 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 36 பள்ளிகளின் மாணவர்கள், மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.