IPL 2025 இறுதிப்போட்டி இன்று (ஜூன் 3) இரவு 07:30 மணியளவில் குஜராத் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மோதும் பஞ்சாப் - பெங்களூர் அணிகள், இதுவரை அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமாக 36 முறை நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. இதில் இரண்டு அணிகளும் 18 முறை வெற்றி அடைந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நீரும் - நெருப்புமாக நடக்கும் சண்டையில், ஓங்கப்போவது யாரின் கை? என்ற கேள்விக்கு இருவருக்குமே வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.